மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரிசியன் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரிசியன் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரிசியன் உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே அண்டக்குடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். முருகேசன் (55). இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரீவைண்டிங் பட்டறை நடத்தி வந்தார். 
இவர் புதன்கிழமை கும்பகோணம் கம்பட்ட விசுவநாதர் கோயில் கீழ வீதியில் உள்ள கோவிந்தசாமியின் பட்டறையில் பழுதான மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டார். 
அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், முருகேசன் இறந்த விவரத்தை அவரது குடும்பத்தினருக்கு கோவிந்தசாமி தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதனால், அதிருப்தியடைந்த முருகேசனின் உறவினர்கள் மெளனசாமி மடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com