கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஜூலை 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
கோட்டாட்சியரகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சார்ந்த தங்கள் கோரிக்கைகள், கடனுதவிகள் தொடர்பான மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று கும்பகோணம் கோட்டாட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.