தமிழ்நாடு நாயுடு பேரவை அமைப்பின் தஞ்சை மண்டலத் தலைவராக பட்டுக்கோட்டை ஆர்.சுப்பையா ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், திராவிட இயக்கத் தலைவரும், மொழிப்போர் தியாகியுமான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேரன் ஆவார். இந்தஅறிவிப்பை தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் டி.குணசேகரன் வெளியிட்டுள்ளார்.