தஞ்சாவூர் சரகத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 333 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் வாகன விபத்தைத் தடுக்கும் விதமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சிறப்பு வாகனத் தணிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 333 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.