தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்கு, ரூ.63 ஆயிரம் நிதியுதவியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சனிக்கிழமை வழங்கியது.
மல்லிப்பட்டினத்தில் கடந்த 10 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் 10 வயது சிறுமி அஃப்ரா பாத்திமா காயமடைந்து, ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்கு உதவிடும் வகையில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் திரட்டப்பட்ட நிதியான ரூ.63 ஆயிரம், சிறுமியின் பெற்றோரிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் மதுக்கூர் ஷேக் அஜ்மல், மல்லிப்பட்டினம் பகுதிச் செயலர் முசாமில், முஹம்மத் அஸ்கர், ஜமாத் பொருளாளர் ஷேக் ஜலால், அதிராம்பட்டினம் பகுதித் தலைவர் முஹம்மத் புஹாரி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.