தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் தப்பிப்பது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன் பங்கேற்று மாணவ, மாணவிகளிடையே தீ விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டால் எப்படி தப்பிப்பது என்பது குறித்து விளக்கினார். இதையடுத்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் திலகர், மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.