வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

தஞ்சாவூர் அன்னசத்திரம் கடைத்தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி ஜெயலட்சுமி (38). இவர் தஞ்சாவூரில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். 

தஞ்சாவூர் அன்னசத்திரம் கடைத்தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி ஜெயலட்சுமி (38). இவர் தஞ்சாவூரில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். 
இவர் அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், வெள்ளி கொலுசு, டம்ளர், தட்டு ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com