திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசை வீடுகள் சேதமடைந்தன.
திருவையாறு அருகே வளப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி ராஜம். இவரது குடிசை வீட்டில் வியாழக்கிழமை திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து, சதீஷ் (27), ராகவன் (28), மகாலிங்கம் ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.
இதில், 5 பவுன் நகைகள், ரூ. 50,000 ரொக்கம், பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களும், இரு சக்கர வாகனங்கள், சைக்கிள், ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
தகவலறிந்த திருவையாறு மற்றும் திருக்காட்டுப்பள்ளி நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.