பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் பங்கேற்று சாலை பாதுகாப்பின் அவசியம் மற்றும் விபத்தில்லா பயணம் ஆகியன குறித்துப் பேசினார்.
சாலை விதிமுகளைக் கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும்போது செல்லிடப்பேசியை உபயோகிக்கக் கூடாது. கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மிதமான வேகத்தில் கட்டுப்பாட்டுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சாலை விதிமுறைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிகழ்ச்சியில் விநியோகிக்கப்பட்டது.