அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே கோயில் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அறந்தாங்கி ஒன்றியம், நாகுடி அருகே சீனமங்கலத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் கதவுகளை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து ஊர் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தெரிய வந்தபோது, அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது, பணம் மற்றும் பொருள்களை எடுத்துவிட்டு உண்டியலை அருகில் உள்ள வயல்காட்டில் மர்ம நபர்கள் விட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து ஊர் மக்கள் அளித்த புகாரின் பேரில் நாகுடி காவல்துறையினர் வந்து உண்டியலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.