தஞ்சாவூரில் சனிக்கிழமை கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் பெரியகோயில் அருகே மேற்கு போலீஸார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பெரியகோயில் எதிரே உள்ள பாலத்தின் அருகே நின்ற இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் மானோஜியப்பா வீதி வாத்தியார் லேனை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் (38) என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷ் பாண்டியனை கைது செய்தனர்.