தேர்தலுக்காக வட்டாட்சியர்கள் பணி இட மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா. பார்த்தசாரதி தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆர். ரெங்கசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பாபநாசம் வட்டாட்சியரை பணியிட மாறுதல் செய்ததை கண்டித்து, பாபநாசம் வட்டாட்சியரகத்தில் அலுவலக அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 28 பேர் கலந்து கொண்டனர்.