பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில்  விரைந்து ரயில் சேவை தொடங்கக் கோரிக்கை

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான ரயில்வழித் தடத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் பணிகளை

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையிலான ரயில்வழித் தடத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் பணிகளை விரைந்து முடித்து, தாமதமின்றி ரயில் சேவையைத் தொடங்க வேண்டுமென அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தஞ்சை எம்பி கு.பரசுராமன் தலைமையில் அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் ஹாஜி எம்.எஸ். ஷிஹாபுதீன்,  ஹாஜி அப்துல் ரெஜாக்,  
ஹாஜி பத்ரூதீன், ஹாஜி சேக் முகமது, எம்.நிஜாமுதீன், ஏ.சாகுல்ஹமீது 
ஆகியோர் தெற்கு ரயில்வே திருச்சி மண்டல வர்த்தகப் பிரிவு கூடுதல் மேலாளர் சி.ஆர்.ஹரீசை அண்மையில் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு: 
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில்  மார்ச் 31-க்குள் நடைபெறவுள்ள சோதனை ஓட்டத்துக்குப் பிறகு,  தாமதமின்றி ரயில்  சேவையைத் தொடங்க வேண்டும். பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை கூடுதலாக இயக்குவதுடன்,  இந்த வழித்தடத்தில் இயங்கவுள்ள  விரைவு ரயில்களில் கூடுதல் கோச் இணைக்கப்பட வேண்டும். சென்னை  ~ காரைக்குடி மார்க்கத்தில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயிலை இயக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
அதிராம்பட்டினத்தில் ஈஸ்ட் கோஸ்ட் சாலையிலிருந்து கடற்கரைத் தெரு வழியாக ரயில் நிலையம் வரை செல்லும் சுமார் 800 மீட்டர் நீள பழுதடைந்த சாலைக்குப் பதிலாக புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com