தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை மொபெட் மீது கார் மோதியதில் கணவன் - மனைவி உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகே தொண்டராயம்பாடியைச் சேர்ந்தவர் ஆர். ஜெயராமன் (68). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது மனைவி மனோன்மணியும் (62) வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து மாரனேரிக்கு மொபெட்டில் புறப்பட்டனர்.
வீட்டு அருகே சென்ற இவர்கள் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ஜெயராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மனோன்மணி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பூதலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.