தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப். 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ணக் கோலங்களை வரைந்தனர். குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, செஞ்சிலுவை சங்க மாவட்டப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.