பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாபநாசம் தேர்தல் தனி துணை வட்டாட்சியரும், துணை தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோவன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஒப்புகைச் சீட்டுடனான வாக்களிப்பு முறை உள்ளிட்ட செயல்பாடுகள் தொடர்பாக செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. இதில் வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.