பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தஞ்சையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மகர்நோம்புச் சாவடி சதாம் உசேன் தெருவைச் சேர்ந்தவர் முகமது யூனிஸ் (50). இவர் வெள்ளிக்கிழமை இரவு கட்டுமாவடியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பட்டுக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அம்மணிசத்திரம் பாலம் அருகே வந்த போது கட்டுமாவடியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகமது யூனிஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சேதுபாவா சத்திரம் போலீஸார் வழக்குப்
பதிவு செய்து விசாரிக்கின்றனர்.