பாபநாசம் பகுதியில் கட்சிக் கொடிகள் அகற்றம்

பாபநாசம் பேரூராட்சிப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.


பாபநாசம் பேரூராட்சிப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பாபநாசம் பேரூராட்சியின் 15 வார்டுகளுக்குள்பட்ட பாபநாசம் புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கடைவீதி, அண்ணா சிலை, புதிய அண்ணா சிலை, திருப்பாலைத்துறை கடைவீதி, பெரியார் சிலை, பாலைவனநாதர் சன்னதி தெரு, கபிஸ்தலம் பிரதான சாலை உள்ளிட்ட  பகுதிகளில்   அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிகள் அகற்றப்பட்டன.
முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள், பதாகைகள் உள்ளிட்டவையும்  அகற்றப்பட்டன.சுவர் விளம்பரங்கள் வர்ணம் பூசி அழிக்கப்பட்டன.
சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டன. பேரூராட்சிப்பணியாளர்கள் மேற்கொண்ட  இப்பணியை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், பேரூராட்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com