பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும் துணைத் தேர்தல் நடத்தும் அலுவலருமான இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர்கள் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.