பொள்ளாச்சி சம்பவம்: அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி

பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அம்மாபேட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஆர். செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர்  எஸ்.எம். குருமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் பி. தாமரைச்செல்வி, ஒன்றிய குழு  உறுப்பினர் ஆர்.எஸ்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.அ. பாரதி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ. மோகன்ஆகியோர் கலந்து கொண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,  இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும்  கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கட்சி நிர்வாகிகள் கே.கே. சேகர், ஜி. பழனிசாமி, டி.ஜி. நாகராஜன் மற்றும்  35 பெண்கள்  உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com