திருவையாறு அருகே ரூ. 17 லட்சம் பறிமுதல்

திருவையாறு அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 17 லட்சத்தை தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருவையாறு அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 17 லட்சத்தை தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவையாறு அருகே ஈச்சங்குடி பிரதான சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வாகனத்தை இக்குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், ரூ. 17 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
தகவலறிந்த உதவிக் கலால் ஆணையர் தவச்செல்வம் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தார். இதையடுத்து, ரூ. 17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவையாறு சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com