தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாட்டில் காய்கறி வியாபாரியிடம் ரூ.52 ஆயிரம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரத்தநாட்டில் சனிக்கிழமை காலை பறக்கும் படையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த போது, பட்டுக்கோட்டை காய்கறி வியாபாரி கண்ணன், உரிய ஆவணமின்றி ரூ.52 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கண்ணனிடம் தேர்தல் தேர்தல் அதிகாரி அழகர்சாமி, வட்டாட்சியர் அருள்ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.