கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 133 ஆம் ஆண்டு மே தின கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் ஆர். மதியழகன் தலைமை வகித்தார். தேசியக்குழு உறுப்பினர் கோ. பழனிசாமி கட்சி கொடியேற்றினார். மாவட்டச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் பேசினர்.
இதில் பல்வேறு அமைப்பு சாரா தொழிற் சங்கப் பொறுப்பாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிற் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.