தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுத் திருவிழா திங்கள்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில், கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் எப். அந்தோணிசாமி அடிகளார் திருப்பலி நடத்தி, மறையுரையாற்றினார். பின்னர், புனிதம் செய்யப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில், பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான அ. பாக்கியசாமி, உதவி அதிபர் சூ. அல்போன்ஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா தொடர்ந்து மே 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் நாள்தோறும் மாலையில் நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடைபெறவுள்ளன. இதில், பல்வேறு ஆலயங்களைச் சேர்ந்த பங்கு தந்தையர்கள் பங்கேற்கின்றனர்.
முக்கியத் திருவிழாவான ஆடம்பர தேர்பவனி மே 14-ம் தேதி இரவு நடைபெறவுள்ளது.