முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மாநகராட்சிக் குப்பைக் கிடங்கை மாற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 08:44 AM | Last Updated : 15th May 2019 08:44 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாநகரில் உள்ள மாநகராட்சிக் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தஞ்சை மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரவையின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசை தமிழக அரசு அணுகி உரிய தண்ணீரை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். கல்வித் துறையில் இதுவரை இருந்து வரும் மொழிப் பாடங்களில் 2 தாள்களும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தஞ்சாவூரில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் அக்ரி மு. செல்வராஜ், பொருளாளர் செல்வராஜ், இணைச் செயலர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.