ஆதரவற்ற 237 பெண்களுக்கு 1,185 கிலோ அரிசி வழங்கல்

அதிராம்பட்டினத்தில் பைத்துல்மால் அமை ப்பின் சேவை திட்டத்தின் கீழ், வாழ்வாதார உதவியாக ஆதரவற்ற

அதிராம்பட்டினத்தில் பைத்துல்மால் அமை ப்பின் சேவை திட்டத்தின் கீழ், வாழ்வாதார உதவியாக ஆதரவற்ற பெண்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த ஆதரவற்ற 237 பெண்களுக்கு, தொழிலதிபர் அதிரை ஹாஜி எம்.ஏ.முகமது முகைதீன் வழங்கிய தலா 5 கிலோ வீதம் என மொத்தம் 1185 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு,  பைத்துல்மால் அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம். ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார்.  செயலாளர் எஸ்.ஏ. அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் இசட். அப்துல் மாலிக், ஏ. முகமது முகைதீன், இ. வாப்பு மரைக்காயர், எம்.நிஜாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com