முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
குடந்தையில் 5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 18th May 2019 09:08 AM | Last Updated : 18th May 2019 09:08 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், மணிகண்டன், டேவிட்பாஸ்கரராஜ், முருகானந்தம், அருள்தாஸ் ஆகியோர் வெள்ளிக்கிழமை திடீரென 50-க்கும் மேற்பட்ட கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பெரியகடைதெருவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுக்கள், கப்புகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, அந்தப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர். இந்த சோதனையில் மொத்தம் சுமார் 5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 77 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஒரு பிளாஸ்டிக் விற்பனைக் கடைக்கு சீல் வைக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.