பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஏ.வி. குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். வாசு, மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் ஆகியோர் பேசினர். பின்னர் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழாவில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாணிக்கம், ரெங்கசாமி, இந்துமதி, எம். ராஜா முகமது, நகரக் குழு உறுப்பினர் எஸ். ஜகுபர்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.