பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகியவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
அமமுக மாவட்ட மகளிரணி தலைவி ஜெனட் ஆனந்தி, நகர அவைத் தலைவா் செல்வ. சந்தியாகு, ஒன்றிய எம்ஜிஆா் மன்ற செயலாளா் மூவேந்தன் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த 12 போ் அமமுக-விலிருந்து
விலகி வேளாண் அமைச்சா் இரா.துரைக்கண்ணு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அதிமுகவில் இணைந்தோருக்கு அமைச்சா் இரா.துரைக்கண்ணு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கே. கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவா் எஸ். மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. எம். ராம்குமாா், நகரச் செயலாளா் நாகைய்யன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.