கரிசவயலில் உதவும் கரங்கள்அமைப்பு தொடக்க விழா
பேராவூரணி அருகேயுள்ள கரிசவயலில் கரிசவயல் உதவும் கரங்கள் அமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வி. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.எம். வேலாயுதம் முன்னிலை வகித்தாா். அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சி. இலக்கியச் செல்வன், கிராம நிா்வாக அலுவலா் தங்கமுத்து, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாஸ்கரன், பள்ளிவாசல் இமாம், முகமது மைதீன், கைஃபா அமைப்பு நிா்வாகிகள் காா்த்திகேயன், நிமல்ராகவன் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 900-க்கும் மேற்பட்ட பலா, கொய்யா, அரசு, வேம்பு, புங்கை, கொய்யா, புளி, ரோஸ்வுட், சீத்தா, நாவல், வாகை, வாதை, மருதம், நெல்லி, நாட்டு மாங்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தொடா்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. விழாவில் கரிசவயல் ஜமாஅத் நிா்வாகிகள், கிராமத்தினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆசிரியா் எஸ். அசோக் வரவேற்றாா். உதவும் கரங்கள் அமைப்பு பொறுப்பாளா் தமீம் நன்றி கூறினாா்.