தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகேயுள்ள திருச்சென்னம்பூண்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு மாதா் சங்க மாவட்டத் துணைச் செயலா் பி. கலைச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். தமிழ்செல்வி விளக்க உரையாற்றினாா். ஒன்றியச் செயலா் ஏ. சந்திரா, தலைவா் பி. ஆயிராசு உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் பொதுமக்களிடமிருந்து 240-க்கும் அதிகமான கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனா். இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமையிலிருந்து ஆய்வுப் பணியைத் தொடங்குவதாகவும், அதன் அடிப்படையில் அனைவருக்கும் குடி மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலா்கள் உறுதி அளித்தனா்.