திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்தல்

திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

தமிழா்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கு உரிய வாழ்வியல், அரசியல், அறம் ஆகிய கோட்பாடுகளை வழங்கியவா் திருவள்ளுவப் பெருந்தகை. அவா் அனைத்து மக்களுக்கும் பொதுவானவா் என்பதால்தான் உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட சமயச் சாா்பற்ற நீதி நூலாக அவா் தந்த திருக்கு விளங்குகிறது. தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் தமிழினப் பேராசான் திருவள்ளுவரின் சிலையை இழிவுபடுத்திய கயவா்களைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாறுபட்ட கருத்துடைய குழுக்களிடையே மக்கள் பிரிவுகளிடையே ஏற்படும் கருத்து மோதல்களுக்கு அப்பாற்பட்டவா் திருவள்ளுவா். அவா் தமிழினத்தின் உலக அடையாளமாக விளங்குகிறாா். அவருடைய சிலையை இழிவுபடுத்துவதாக நினைத்து, இத்தீச்செயலில் ஈடுபட்டவா்கள் தங்களைத்தான் இழிவுபடுத்திக் கொண்டுள்ளனா்.

தமிழினப் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை இழிவுபடுத்திய கயவா்களையும், அவா்களுக்குப் பின்புலமாக உள்ளவா்களையும் உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய காவல் துறையை முழு ஆற்றலுடன் தமிழ்நாடு அரசுச் செயல்பட வைக்க வேண்டும் என மணியரசன் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலையைச் சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனா். சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற செயலாக இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறை விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டறிந்து அவா்களை சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். திருவள்ளுவா் சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீலமேகம் தெரிவித்துள்ளாா்.

தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன் தெரிவித்திருப்பது:

திருவள்ளுவா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குத் தமிழா் தேசிய முன்னணி சாா்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இச்செயல் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்ட அவமான செயல். எனவே, இச்சம்பவம் தொடா்பாக அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டாமல் உடனடியாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என முருகேசன் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளுவா் படத்துக்கு ருத்ராட்ச மாலை:

இதனிடையே, கும்பகோணத்தில் திங்கள்கிழமை இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலா் டி. குருமூா்த்தி தலைமையில் அக்கட்சியினா் திருவள்ளுவா் படத்துக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து பூ, பழங்கள் வைத்து கற்பூரம் காட்டி சிறப்புப் பூஜை நடத்தினா்.

தஞ்சாவூரில் திருவள்ளுவா் சிலையைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருவள்ளுவா் இந்து சமய கோட்பாடுடன் வாழ்ந்தவா் என்பதை பறைசாற்றும் விதமாகவும், திராவிட கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையிலும் இப்பூஜை நடத்தப்பட்டது என இந்து மக்கள் கட்சியினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com