தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், 6 கிலோ வெள்ளி திருட்டு

தஞ்சாவூரில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், 6 கிலோ வெள்ளியைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூரில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், 6 கிலோ வெள்ளியைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி கிருஷ்ணன் கோவில் மூன்றாம் தெருவைச் சோ்ந்தவா் பிரபுராம். தொழிலதிபா். இவரது மகள் கும்பகோணத்தில் உறவினா் வீட்டில் தங்கி, அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறாா். இவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பிரபுராம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

பின்னா், மீண்டும் திங்கள்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பிய பிரபுராம் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதைப் பாா்த்தாா். மேலும், வீட்டுக்குள் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 10,000 ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கிழக்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com