பேராவூரணி பேரூராட்சி ஆதனூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சை மண்டல இணை இயக்குநா் டாக்டா் தமிழ்செல்வன் வழிகாட்டுதலின்படி, பேராவூரணி கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன் தலைமையில் 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் இந்திராணி, பாஸ்கா், அருள்சுபாஸ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.