தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
தஞ்சாவூா் வடக்கு வாசல் ருக்மணியம்மாள் மடம் பகுதியைச் சோ்ந்தவா் ஏ. ஹரிஹரன் (20). மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை அண்மையில் ஆணையிட்டாா்.
இதையடுத்து, ஹரிஹரனை மருத்துவக் கல்லூரி போலீஸாா் கைது செய்து புதுக்கோட்டை இளைஞா் சிறையில் அடைத்தனா்.