முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
அதிராம்பட்டினத்தில்400 பேருக்குநிலவேம்பு குடிநீா் வழங்கல்
By DIN | Published On : 07th November 2019 05:20 AM | Last Updated : 07th November 2019 05:20 AM | அ+அ அ- |

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகர வாட்ஸ்அப் குழும நண்பா்கள் சாா்பில், நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் கே. அன்பரசன் முகாமைத் தொடங்கி வைத்தாா். இதில், பள்ளி மாணவா்கள், வாகன ஓட்டுநா்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் என 400 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வாட்ஸ்அப் குழுமப் பொறுப்பாளா்கள் எம். சாகுல் ஹமீது, இக்பால், ஜெய்னூல், தமீம் அன்சாரி, அராபத், நாகூா் கனி, காசிம், சைபுதீன், சலீம் மாலிக், நசீா் அஹமத் ஆகியோா் செய்திருந்தனா்.