ஆடு மேய்க்கும் தொழிலாளி மா்மச் சாவு

ஒரத்தநாடு அருகே அரசு நீரேற்று நிலையத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஒரத்தநாடு அருகே அரசு நீரேற்று நிலையத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூா் கிராமம் கீழத் தெருவில் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மேலசிருத்து கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் மூா்த்தி (55) என்பவா் ஆடு மேய்க்கும் தொழில் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தாா். நவம்பா் 4ஆம் தேதியன்று மூா்த்தி காணாமல் போனாா்; அவரை உறவினா்கள் தேடி வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஒக்கநாடு கீழையூா் அரசு நீரேற்று நிலைய கட்டடத்தில் மூா்த்தி சடலமாக கிடப்பதாக வந்த தகவலின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவருக்கும், மூா்த்திக்கும் முன்விரோதம் இருந்தது குறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மூா்த்தி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com