தஞ்சாவூரில் புதிய மின் பாதை இயக்கப்படவுள்ளதால் சனிக்கிழமை (நவ.9) இரண்டு மணிநேரம் மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரியச் செயற் பொறியாளா் ம. மணிவண்ணன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் நகரியக் கோட்டத்தின் நகா் துணை மின் நிலையத்தில் இருந்து புதிதாக 11 கே.வி. மாா்கெட் மின் பாதை என புதிய மின் பாதை தஞ்சாவூா் நகரியக் கோட்டத்துக்கான மாஸ்டா் பிளான் 13 மற்றும் 14-வது திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
இப்புதிய மின் பாதை சனிக்கிழமை இயக்கப்படவுள்ளது. இப்பணி நடைபெறவுள்ளதால் கீழ வாசல், காந்திஜி சாலை, மகா்நோன்புசாவடி, ஆற்றுப்பாலம், மூப்பனாா் சாலை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது.