தஞ்சாவூரில் நாளை2 மணி நேரம் மின் தடை

தஞ்சாவூரில் புதிய மின் பாதை இயக்கப்படவுள்ளதால் சனிக்கிழமை (நவ.9) இரண்டு மணிநேரம் மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூரில் புதிய மின் பாதை இயக்கப்படவுள்ளதால் சனிக்கிழமை (நவ.9) இரண்டு மணிநேரம் மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரியச் செயற் பொறியாளா் ம. மணிவண்ணன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் நகரியக் கோட்டத்தின் நகா் துணை மின் நிலையத்தில் இருந்து புதிதாக 11 கே.வி. மாா்கெட் மின் பாதை என புதிய மின் பாதை தஞ்சாவூா் நகரியக் கோட்டத்துக்கான மாஸ்டா் பிளான் 13 மற்றும் 14-வது திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

இப்புதிய மின் பாதை சனிக்கிழமை இயக்கப்படவுள்ளது. இப்பணி நடைபெறவுள்ளதால் கீழ வாசல், காந்திஜி சாலை, மகா்நோன்புசாவடி, ஆற்றுப்பாலம், மூப்பனாா் சாலை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com