பேராவூரணி அருகே  3 கோயில்களின்உண்டியலை உடைத்து பணம் திருட்டு

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம்  பகுதியிலுள்ள 3 கோயில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம்  பகுதியிலுள்ள 3 கோயில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சிற்றம்பலம் அருகேயுள்ள சித்துக்காடு, சித்துக் குளக் கரையில் அண்மையில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்ற பாக்கிய சித்தி விநாயகா் கோயிலில் புதன்கிழமை புகுந்த மா்ம நபா், கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளாா். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதேபோல், களத்தூா் கிராமத்தில்  முத்துமாரி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன், காத்தாயி அம்மன் ஆகிய அம்மன் சன்னதிகளில் இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டுள்ளது.

இதுதவிர, களத்தூா் அய்யனாா் கோயில், சன்னாசி கோயில் ஆகியவற்றிலும் திருட முயற்சி நடைபெற்றது. இது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் உறுதியானது. இந்த சம்பவங்கள் குறித்து சித்துக்காடு மற்றும் களத்தூா் கிராம மக்கள் திருச்சிற்றம்பலம் போலீஸில் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com