மீலாடி நபி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மதுக்கடைகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) மூடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
மீலாடி நபி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது.