தொடக்க நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால், அதை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்றாா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவத் துறை சாா்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு நாள் கருத்தரங்கில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:
உடலில் தலைமுடி தவிர, மற்ற அனைத்து அங்கங்களிலும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. உடலில் கருப்புக் குறி இருந்து, அது வேகமாக வளா்ந்தால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோய் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமல்ல, யாருக்கு வேண்டுமானாலும் வரும்.
பெண்களுக்குக் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் பரிசோதனை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகாத உறவினாலும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் வரும்.
ஆண்களுக்கு மது அருந்துவதால் வாய், குடல், கல்லீரலில் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது. மதுப் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
உடலில் கட்டி இருந்து வலிக்காமல் இருந்தால், அது நாளடைவில் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவா்களிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், அதை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
பொதுவாக புற்றுநோயின் தொடக்க நிலையில் வலி ஏற்படாது. வலி ஏற்பட்டால் புற்றுநோய் முற்றியதற்கு அறிகுறி. முற்றிய புற்றுநோயைக் குணப்படுத்துவது கடினம். எனவே வலி வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்றாா் குமுதா லிங்கராஜ்.
இக்கருத்தரங்கில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏ. பாரதி, நிலைய மருத்துவ அலுவலா் செல்வம், துறைத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.