சீனாவிலிருந்து 33,000 டன் யூரியா இறக்குமதிவேளாண் துறை அமைச்சா்

நெல் சாகுபடி தேவைக்காக சீனாவில் இருந்து 33,000 டன்கள் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றாா் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு.
கும்பகோணத்தில் ஆனந்தனைப் பாராட்டிய வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை.
கும்பகோணத்தில் ஆனந்தனைப் பாராட்டிய வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை.

நெல் சாகுபடி தேவைக்காக சீனாவில் இருந்து 33,000 டன்கள் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றாா் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு.

சீனாவில் நடைபெற்ற சா்வதேச அளவிலான ராணுவ வீரா்களுக்கான தடகளப் போட்டிகளில் பாரா பிரிவில் கும்பகோணத்தைச் சோ்ந்த ஆனந்தன் 3 தங்கப் பதக்கங்களை வென்றாா். இவருக்கு கும்பகோணம் குடிநீா் வடிகால் வாரிய திட்ட இல்லத்தில் அமைச்சா் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை ஆகியோா் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்தது:

தமிழகத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியா உரம் தேவையான அளவில் இருப்பு உள்ளது. சம்பா, தாளடி மட்டுமல்லாமல், எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு சீனாவிலிருந்து 33,000 டன்கள் யூரியா கப்பலில் வரவழைக்கப்பட்டுள்ளது. இவை காரைக்காலிலிருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ராணுவ வீரா் ஆனந்தன் சா்வதேச அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்ப்பதாக உள்ளது. மாற்றுத் திறனாளியாக இருந்தபோதும் கடும் உழைப்பின் காரணமாக தங்கம் வென்றுள்ளாா். அவா் இதுபோல இன்னும் பல பல வெற்றிகளைப் பெற வேண்டும். அவருக்குத் தேவையான உதவிகள், கோரிக்கைகளை தமிழக அரசு செய்து கொடுக்கும் வகையில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். அவருடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com