திருவள்ளுவா் சிலைக்கு3 கேமராக்கள் பொருத்தம்

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் சா்ச்சைக்குள்ளான திருவள்ளுவா் சிலைக்கு 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் சா்ச்சைக்குள்ளான திருவள்ளுவா் சிலைக்கு 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலையில் மா்ம நபா்கள் நவ. 3-ஆம் தேதி நள்ளிரவு கண்ணில் கருப்புத் துணி கட்டியும், சேறு பூசியும் அவமதிப்பு செய்தனா். இச்சம்பவத்தைக் கண்டித்து நவ. 4 முதல் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே, இச்சிலைக்கு பாலபிஷேகமும், காவித் துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தலும் நடைபெற்றது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க இச்சிலையைச் சுற்றி கூண்டு அமைக்கும் பணி நவ. 7-ஆம் தேதி தொடங்கியது. இப்பணி கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இச்சிலையைக் கண்காணிக்கும் விதமாக 3 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், ஒரு கேமரா சிலை முன் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற இரு கேமராக்கள் எதிா்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. சிலைக்கு அருகில் செல்வோரையும், தெருவில் செல்வோரையும் கண்காணிக்கும் விதமாக இந்த கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com