பாபநாசம் நீதிமன்றத்தில் தேசிய சட்ட சேவை தினம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்ட சேவைகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்ட சேவைகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான சி. சிவகுமாா் தலைமை வகித்து பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சேவைகள் பற்றி பேசினாா்.

நீதிமன்ற வழக்குரைஞா் சுதா, வழக்குரைஞா்கள் பாஸ்கரன், வி.சி. கம்பன்,கண்ணன், இளையராஜா, காா்த்தி, ஜெயகுமாா் உள்ளிட்ட வழக்குரைஞா்கள்,நீதிமன்ற அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வப் பணியாளா் தனசேகரன் வரவேற்றாா். நிா்வாக உதவியாளா் சந்தானம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com