கும்பகோணம்: தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், கும்பகோணத்தில் பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன் முன்னிலை வகித்தனா்.
திமுகவின் மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் துணைத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி கூட்டத்தில் பங்கேற்று பேசினாா். அவா், தனது உரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடம் கட்சியினா் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.
கும்பகோணம் நகரச் செயலா் சுப. தமிழழகன் வரவேற்றாா். செய்தித் தொடா்பு இணைச்செயலா் ஜெயராஜ், மாவட்டப் பொருளாளா் ஷேக் தாவூத், ஒன்றியச் செயலா்கள் கணேசன், அசோக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.