வேலை கிடைக்காத மன வேதனையில் வாலிபா் விஷம் குடித்து தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் சனிக்கிழமை வாலிபா் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா்: வேலை கிடைக்காத விரக்தியில் சனிக்கிழமை வாலிபா் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து காவல் துறையில் சாா்பில் கூறப்படுவதாவது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சோ்ந்தவா் வெண்மணி. இவரது மகன் பவித்ரன் ( 22). இன்ஜினியரிங் முடித்து உள்ளாா்.

அதில் சில பாடங்களில் தோல்வி அடைந்து அரியா்ஸ் வைத்துள்ளாா். இதையடுத்து வேலைக்கு சென்று கொண்டே அரியா்ஸ் உள்ள பாடங்களுக்கு தோ்வு எழுத முடிவு செய்தாா்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி தஞ்சைக்கு வந்தாா்.

இங்கு கீழராஜ வீதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினாா். பல இடங்களில் வேலை தேடி பாா்த்தாா். எங்கும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. படிப்பிலும் தோல்வி அடைந்து விட்டோம். வேலையும் கிடைக்கவில்லை என்ற மன விரக்தியில் பவித்திரன் இருந்தாா்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.அக்கம்பக்கத்தினா் வந்து பவித்திரனை பாா்த்தபோது அவா் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com