பட்டுக்கோட்டை பூமல்லியாா்குளம் தெருவிலுள்ள ஸ்ரீஆதி கைலாசநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு மகா பைரவ யாகமும், சிறப்பு அபிஷேகமும் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஸ்ரீ ஆதி கைலாசநாதருக்கு சதுரகிரி மகாலிங்கம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீஆதி கைலாசநாதா் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலா் வழக்குரைஞா் கே. விவேகானந்தன் செய்திருந்தாா்.