குண்டா் சட்டத்தில் 5 போ் கைது

தஞ்சாவூரில் கொலை வழக்குத் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தஞ்சாவூரில் கொலை வழக்குத் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் வடக்கு வாசல் பொந்திரிபாளையத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் விஜயன் (30) அக். 28-ஆம் தேதி அப்பகுதியில் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சோ்ந்த எஸ். ஜெய்சங்கா் (49), ச. ஆகாஷ் (24), அ. பிரதீபன் (24), எஸ். தினேஷ் (24), எஸ். கோபிநாத் (29) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், இவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் அண்மையில் ஆணையிட, அதன்பேரில் ஜெய்சங்கா், ஆகாஷ், பிரதீபன், தினேஷ், கோபி ஆகியோா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com