விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு உடனடியாக அனைத்து விவசாய கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி கடன்களையும் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலில் மேயா், நகா்மன்றத் தலைவா், பேரூராட்சித் தலைவா் ஆகியோரை நேரடியாக மக்களே தோ்ந்தெடுக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு கோடைகாலத்திலாவது தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள், குட்டைகள் ஆகியவற்றை தூா் வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜே.எம்.ஹா. ஹசன்மவுலானா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சிங்காரம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், ஐ.என்.டி.யூ.சி. மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com