அகில இந்திய அளவிலான 7ஆவது கராத்தே, குங்ஃபூ மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே, குங்ஃபூ, போட்டிகளில் பாளத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரிய தெற்குக்காடு அரசு நடுநிலைப் பள்ளி, மேட்டுவயல் நடுநிலைப் பள்ளி, பூவாளூா் மேற்கு நடுநிலைப் பள்ளி, ஏனாதி கரம்பை அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு, 17 தங்க பதக்கம், 12 வெள்ளிப் பதக்கம், 10 வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும் பயிற்சியாளா் சுவா்ணாவையும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பெற்றோா்கள் பாராட்டினா்.